Monday, March 28, 2011

ஒரு மாலை ரயில் பயணம்...!

தனிமை சில நேரம் நமக்கு வாழ்க்கை பாடம் கற்று தருகிறது

என்னனோடு நான் மட்டும் என்னை பார்கிறேன்

நானும் என் நினைவுகளும் பேசி கொண்டோம்

நடந்து வந்த பாதைகள், கடந்து சென்ற மனிதர்கள்...!

சில நிகழ்வுகள் நெஞ்சில் நிழலாய் தொடருகின்றன !

சில நிகழ்வுகள் மனத்திரையில் தினம் 3 வேளையும் திரை இட படுகிறது சினிமா போல

5 வருடத்திற்கு முன் நான் இப்படி இல்லை. எனக்குள் பல நல்ல மாற்றம் சில தேவை இல்லாத மாற்றங்களும் தான்

சில விஷயங்களை ஏத்துக்க முடியாது, கோவம் வரும் ! குறைகள் பெருசா தெரியும்! இப்ப கொஞ்சம் நல்ல மாற்றம் இருக்கு. மற்றவர்களை அப்படியே ஏத்துக்குறேன். நல்லது மட்டும் தான் கணக்குல எடுத்துக்குறேன்

யாரும் யாருக்காகவும் மாற முடியாது, மாறவும் தேவை இல்ல ! 
எல்லோருக்கும் ஒரு நியாய புத்தகம் இருக்கு. அதுல அவங்களுக்குனு ஒரு முன்னுரை இருக்கு ஒரு தெளிவுரையும் இருக்கு

ஒன்று புரிந்தது எனக்கு, அனுபவங்கள் நம்மை பக்குவ படுத்துகின்றன

யாரையும் நல்லவங்க ? கெட்டவங்க - னு பிரிக்க முடியாது

எல்லாரும் நல்ல வங்க தான். சூழ்நிலைகள் தான் ஒருவனின் சுய ரூபத்தை அவனுக்கே உணர்த்துகிறது

உடல் வளர்ச்சி ஒரு வயதில் முழுமை அடைகிறது. ஆனால்,
நம் அனுபவங்காளால் நம் எண்ணங்களால் மனதளவில் ஒவ்வொரு நாளும் வளர்கிறோம்

ஒரே தத்துவமா இருக்கா ? கொஞ்சம் நேரம் train ல தனிய உட்கார்ந்து யோசித்ததின் விளைவு :)
இந்த மாதிரி உங்களுக்கும் அனுபவம் ஏற்பட்டு இருக்கும். நான் அதை பதிவு பண்ணி இருக்கேன். அவ்ளோதான்.....!
 
நன்றி,
மயில்




Friday, March 25, 2011

என் அருகில் எப்போதும் போல் நீங்கள் !!!!

அப்பா அம்மா ,
எனக்கு உயிர் கொடுத்து உடல் கொடுத்து உலகம் கற்று கொடுத்து

தந்தையாய் தோழனாய் ஆசானாய் என்னை வழிநடத்தி

அன்பும் கல்வியும் தான் அழியாத சொத்து என்று வலியுறுத்தி

வறுமை நம்மை வாட்டிய போதிலும், வளம் குறையாமல் என்னை வளர்த்து

இதுதான் வாழ்க்கை என்று அடையாளம் காட்டினீர்கள்

பாதி வழியில் பாதை மறந்து நின்றேன்

குஞ்சுகள் பெருசானதும் கோழி விலகுவது போல

என்னை விட்டு சென்று விட்டீர்களா ?

என்ன நடந்தாலும் ஓடி வந்து உங்களிடம் சொல்லும் நான்
 
இன்றும் சொல்லி கொண்டு தான் இருக்கேன்.........!

என் அருகில் எப்போதும் போல் நீங்கள் !

நன்றி,
மயில்