Wednesday, April 13, 2011

கனா கண்டேன்....!!!




நமக்குள் இருக்கும் ஒரு மாய உலகம்

கண்ணனுக்கு பின்னால் மூளைக்கு முன்னால்

கண்களை மூடினால் மட்டுமே காட்சிகள் தெரியும்

எதுவும் சாத்தியம் இந்த உலகத்தில்


உணர்சிகளால் உருவாக்க பட்ட உயிர் பொம்மைகளின் ஆட்சி

நிஜங்களை சுமந்து கொண்டு  கனவு  பொம்மைகள்

உணர மட்டும் முடிந்த உரையாடல்கள்

மனிதனும் மாயாவி ஆகலாம் சாகசங்கள் பல புரியலாம்


தூக்கம் - கடவுளின் வரப்ரசாதம்

வாழும்போது மனிதனுக்கு வழங்கப்பட்ட சொர்க்கம்

கனவு - தூக்கத்தின் ஒரு பார்வை

ஒரு வேலை இந்த மாயஉலகம் தான் சொர்கமோ ?


முழுவதும் காட்ட படாத புது பட காட்சிகள் போல்

சிறு சிறு கனவுகளால் கடவுள் சொர்க்கத்தை காண்பிகிறாரோ !

தூக்கத்தில் குழந்தையின் சிரிப்பு - பாப்பா சாமி கூட பேசுது

ஒரு வேளை கடவுள் அந்த மாயா லோகத்துல இருக்காறோ?


என்னவோ ! தூங்கி எழுந்ததும் தோனியதை எழுதிவிட்டேன்

யோசிக்கவேண்டியது உங்க பொறுப்பு !

நன்றி,
மயில்

Saturday, April 2, 2011

வெட்கமே ஒரு வானவில்லாய் !



நீ துயில் எழுந்தால் அது எங்கள் விடியல் !

தங்க முகமாய் சூரியன்

பசுமலை யாம் உடல்

சருகை சேலையாக ஒளி கதிர்கள்

வெள்ளி கொலுசாய் சல சலக்கும் நதிகள்


கார்மேகமாய் உன் கூந்தல் - அதில்

மாலையில் நீ சூடும் மல்லிகைதான் நிலா

நட்சத்திரங்களால் உன் சிகை அலங்காரம்

நீ ஓடி விளையாடவே ஒன்பது கோள்கள்


சுவாசமே இளந்தென்றல்

நீ மாற்றும் உடைதான் பருவ காலங்கள்

பாசமாய் உன் மழை நேசமாய் உன் சாரல்

வெட்கமே ஒரு வானவில்லாய் !

நன்றி,
மயில்

கலர் கலர் எண்ணங்கள்....!



குழந்தையாய் மாறி சில நிமிடம்

நான் வரைந்த பொம்மை

என்னால் உருவாக்கப்பட்ட படைப்பு

மனம் முழுவதும் அதில்தான் முடியும்வரை

மறந்தும் வேறு சிந்தனை வரவில்லை

எதையும் சாதிக்கவில்லை இந்த வரைபடத்தில்

சாதிக்க நான் ஓவியரும் இல்லை

ஆனால் என்னால் முடிந்தது என்ற பூரிப்பு

புதுவித ஹார்மோன் சுரந்தது

ஒவ்வொரு மனமும் இதுக்குதானே ஏங்குகிறது

முடியும் என்ற எண்ணம் தானே வெற்றியின் முதல் நிலை

பழமை விரும்பபடுகிறது

புதுமை தேடப்படுகிறது

ஒவ்வொரு நாளும் புதுமை

சூரியனோடு சேர்ந்து நாளும் பிறக்கிறது..! நாமும் பிறப்பதாய் உணர்வோம்

இதற்காவே குழந்தையாய் தினம் சில நிமிடம் செலவழிக்க வேண்டும் - ஏனென்றால் ?

கற்பனைக்கு எல்லை இல்லை

இது முடியும் இது முடியாது என்று தெரியாது

முயன்று பார்க்க மட்டுமே தெரியும்

கலர் கலர் வண்ணங்கள் போல் ர் ர் ண்ங்ள்
ஒவ்வொன்றும் ஒரு புதையல் !

குறிப்பு :

சின்ன விஷயத்த பெருசா சொல்லி இருக்கேனா ?

// சிறு துளி பெருவெள்ளம் //

சின்ன சின்ன சந்தோசங்கள் சேர்த்து வைப்போமே

சந்தோச வெள்ளத்தில் மிதப்போமே !

சிறு சேமிப்பு விளம்பரம் மாதிரின்னு வச்சுகோங்க :)

நன்றி,
மயில்