Saturday, February 19, 2011

கண்கள்

முதல் பார்வையில் தொலைத்தேன் என்னை
ஆயிரம் பேசின உன் கண்கள் !
பார்த்து கொண்டு இருந்தன உன் இதழ்கள் !
ஓ! காதலில் மட்டும் கடவுளின் படைப்பு மாறுபட்டு வேலை செய்கிறதோ !

நன்றி,
மயில்

Friday, February 18, 2011

இறைவன் - என்னை தொலைத்து உன்னை தேடுகின்றேன்


எனக்குள் நீ

நான் இல்லாத நான் நீ

அன்பே உருவம் அடக்கமே ஆபரணம்

எண்ணத்தில் நன்மை சொல்லில் மேன்மை

சொர்கத்திற்கு அருகாமை

தேடுகின்றேன் உன்னை !

தொலைக்க வேண்டும் என்னை (நான்)

நன்றி,
மயில்



வணக்கம்

வணக்கம்,
இது என்னுடைய முதல் பதிவு. ஆனைமுகனை வணங்கி தொடங்குகிறேன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா!
 
நான் இந்த Blog ஆரம்பிதத்தின் நோக்கம் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் சில தருணங்களை இங்கே செலவிட விருப்பம். எழுத்துகளாக என் எண்ணங்களை மாற்ற ஒரு முயற்சி . நான் கற்றது, கேட்டது, படித்தது மற்றும் என் நினைவுகள், உணர்வுகளின் வெளிபாடு தான் இந்த பதிவு.
 
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து என் முதல் பதிப்பை முடிக்கின்றேன்.

நன்றி!

அன்பே சிவம்.