Tuesday, August 26, 2014

மனம் ஒரு மகாசக்தி




மனம் ஒரு  மகாசக்தி...............!!! சரியாக பக்குவபடுத்த படுமாயின் !!!

சில நேரங்களில் வேளைகளில் இருந்து தப்பிக்க  நாம்(நான்) ஒவ்வொரு காரணம் தேடுகிறோம்...இது சரியாய் இல்லை  அது சரியாய்  இல்லை  . எல்லாம் சரியாய் இருந்து இருந்த நான் அப்படி பண்ணி இருப்பேன்...இப்படி பண்ணி இருப்பேன்னு கத சொல்லுறது .

ஒரு வேலை எல்லாம் சரியாய் இருந்தா...எனக்கு மனசு சரி
இல்லைன்னு   சொல்லிட வேண்டியது . எப்படி எல்லாம் யோசிக்கிறது இந்த மூளை (??!!) ...

ரொம்ப நேரம் யோசிச்சதுல ஒன்று புரிந்தது ... மனம் மட்டும் நல்லா  இருந்த மலையும் நகர்த்தி விடலாம் என்று. 

நம்ம மட்டும் மனசு வச்ச போதும்  எந்த வேலையும் அசத்தி புடலாம்  :)

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு "

முதல் விஷயம் மனச ஆரோக்கியமா வச்சுக்கனும்...எந்த சூழ்நிலையையும் நமக்கும் நன்மைக்கும்  சாதகமா மாற்றி விடலாம்.

"மனமும்  மனம்  சார்ந்த இடமும் வீடு " - படித்ததில் பிடித்தது  facebook 

இந்த மாதிரி நான் கடந்து வர்ற எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்...இந்த நிமிடத்தின் உணர்வை இங்கே பகிர்ந்து ஆகி விட்டது. எண்ணங்களின்  கோர்வையே வாழ்க்கை எனது பார்வையில்.

நல்ல மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் பெற இறைவனை வேண்டுவோம் :)


நன்றி ,

மயில் 












Monday, July 21, 2014

வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம்

குட்டி பிளாஷ்பாக் என்னை பற்றி :)

நான் கடைசியா போஸ்ட் போட்டது 2012- இல்.  அப்போ நான் மனைவி மட்டும்தான் இப்ப அம்மா ங்ர பெருமையும்  பொறுமையும் சேர்ந்து வந்து இருக்கு :)

எங்கள் மகளின் பெயர் சஞ்ஜனா 1.5 வருடம் ஆகிறது .

இந்த இரண்டு வருடம் இந்தியா ல நல்ல மகிழ்ச்சியா  இருந்துட்டு எல்லாரோடும் மகிழ்சிய பகிர்ந்துடு இப்ப மகிழ்சிய (மணி...மணி)  இரட்டிப்பா ஆக்க சுவிஸ் வந்தாச்சு :) குடும்பத்துல ஒரு தலைக்கட்டு கூடி போச்சுல...பொறுப்பா சம்பாதிக்கனும்ல.... என்ன நான் சொல்லுறது ?? சரிதானா ?!!!!!

என் வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

தவறாமல் என் அனுபவங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்  .
காசு குடுத்து வாங்க முடியாததுல அனுபவமும் ஒன்று.

சரி...எல்லாரும் அனுபவத்த படிகோணும். அப்பறம் ராமசாமி விட்டு போச்சு....கந்தசாமி விட்டுபோச்சு -ன்னு  சொல்ல கூடாது :)

ஆரோக்கியமா இருங்க...ஆனந்தமா இருங்க .


நன்றி,
மயில் .