Monday, May 16, 2011

நெஞ்சுல உன்ன சுமந்து....




நெஞ்சுல உன்ன சுமந்து...

நிதம் நிதம் பொறந்துகிட்டு இருக்கேன்

என் வாழ் நாள கூட்ட இல்ல நீ குடிஇருக்க நித்தம் ஒரு புது வீடு !


மனசுல உன்ன நெனச்சு நெனச்சு மயங்கி தான் போறேன்

ஒரு மறு பார்வை நீ பார்த்த உலகம் மறந்து தான் போறேன் !

கண்ணுல என்ன காந்தமா வச்சு இருக்க ?


ஒரு மைல் தூரம்மினாலும் உன் குரல் கேட்ட ஓடி வருவேனய்யா

ரயிலு வண்டி வேகமா ? இல்ல இந்த ராசாத்தி வேகமா ?

புதிர் போட்டு கேட்குது இந்த ஊரு சனம் எல்லாம் !


காடு கரை சுத்தி திரிஞ்சு...

மானம் மஞ்ச தேஞ்சு குளிக்கிற வேளையில

மயங்கி நீ மடி வந்து சேரும் போது

பிள்ளையாய் நீ தாயாய் நான்! உலகம் நம்ம வீட்டுக்குள்ளதான்!


நன்றி,
மயில்


குறிப்பு : இதை எழுதும் போது என் மனதில் வந்து தங்கி போன மேரி அக்காவுக்கு நன்றி. சின்ன வயசுல நான் பார்த்த கிராமத்து தேவதை. கருப்ப இருந்தாலும் கலையா இருப்பாங்களா ! அப்படி தான் மேரி அக்கா. அழகா இருப்பாங்க ! கருப்பு ஐஸ்வர்யாராய் :)

படம் : இளையராஜா ஆயில் painting . இந்த link பாருங்க https://picasaweb.google.com/artistilayaraja . இளையராஜா - னு பெயர் வச்சாலே இப்படி கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வைப்பாங்க போல. இந்த படங்கள் என்னை ரொம்ப கவர்ந்தவை.