Sunday, January 8, 2012

புத்தாண்டில் புது தொடக்கம்

ஓம் நமோ பகவதே சதசிவாய !!
கடவுளுக்கு நன்றி !!
கடந்த வருடத்திற்கு நன்றி !!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
இந்த வருடம் மட்டும் அல்லாது வரவிற்கும் வருடங்கள் அனைத்தும் நலமாக அமைய வாழ்த்துக்கள். 
புத்தாண்டு இந்த வருடம் புத்தர் கோவிலில். புது வித அனுபவம் !! இதுவர எனக்கு புத்தர் பத்தி தெரிஞ்சது ரெண்டு விஷயம் தான். அவருக்கு போதி மரத்துக்கு அடியில ஞானம் பொறந்துச்சு அப்பறம் ஆசை தான் துன்பத்துக்கு காரணம்னு புத்தர் சொல்லி இருக்கார்.  அப்பறம் யாரோ சொன்னது "மக்கள் ஆசை பட கூடாதுன்னு புத்தர் ஆசை பட்டார் " .
Buddhism என்றால் புத்தர வழிபடுரவங்க. ஆனால் அங்க போனதுக்கு அப்பறம் தெரிஞ்சாச்சு புத்திசம் இன்னும் எவ்ளவோ விஷயகள சொல்லுது . நல்லது எங்க இருந்தாலும் எடுத்துக்கிறது நமக்கு பிடிக்கும் :)
ஆர்ய தார - பெண் புத்தர்.  ஹிந்து வழிபாட்டில் உள்ளது போல பெண் தெய்வங்கள் உள்ளது எனக்கு தெரியாது விஷயம். தாயின் அருகாமை எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒரு அசாத்திய நம்பிக்கை .வழக்கம் போல எல்லா குழந்தைக்கும் உள்ளது போல அம்மாகிட்ட ஒரு ஈர்ப்பு :)

புத்த சாக்யமுனி - புத்தரின்பெயர் இவ்வாறு சொல்ல படுகிறது . இந்த பெயர பார்த்ததும் இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்னு தோனுச்சு . நான் இந்த book  "Modern buddhism "  படிக்க ஆரம்பிச்சுருக்கேன். படிச்சுட்டு என்னோட எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன் .

நன்றி
மயில்

No comments:

Post a Comment